219 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!!

முல்லைத்தீவு கேப்பாபிலவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் 14 நாட்கள் கண்காணிப்பினை நிறைவு செய்த 219 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2 ஆம் திகதி தென்கொரியாவிற்கு சென்று நாடுதிரும்பியவர்கள் கட்டுநாயக்கா விமான நிலைத்தில் இருந்து தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் பி.சி.ஆர் பரிசோதனையின் போது அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்படாத நிலையில் அவர்கள் இன்று வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது தனிமைப்படுத்தலை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.
கடற்படையினரின் பாதுகாப்புடன் அவர்கள் 7 பேருந்துக்களில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களுள் கர்ப்பிணி பெண் ஒருவர் உள்ளிட்ட 6 பெண்களும் 3 சிறுவர்களும் 210 ஆண்களும் அடங்குகின்றார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.