இளம்பெண் ஒருவர் மட்டக்களப்பில் மாயம்!!

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையப் பிரிவின் கீழ் உள்ள இருதயபுர பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக நேற்று சனிக்கிழமை (26) இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தெரிவித்தனர்.

இருதயபுரம் 9 குறுக்கு வீதியைச் சேர்ந்த லோறன்ஸ் சேரா என்ற 27 வயதுடைய குறித்த பெண் தனியார் கல்வி நிலையத்தில் கற்பித்துவருவதாகவும் சம்பவதினமான நேற்று சனிக்கிழமை (26) திகதி காலை 10 மணிக்கு நண்பி ஒருவரிடம் சென்றுவருவதாக வீட்டில் இருந்து வெளியேறியவர் திரும்பி வராத நிலையில் அவரை தேடியபோது அவர் காணமல் போயுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் நேற்று இரவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.