ஒகஸ்ட் 31 மஹாராஷ்டிராவில் ஊரடங்கு உத்தரவு வரை நீடிப்பு!

கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மஹாராஷ்டிராவில் ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் இரண்டு கட்ட தளர்வுகளை மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தளர்வுகளின்போது வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயற்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேலும், இறுதி சடங்கு நிகழச்சிகளில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகள் தொடரும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.