வீடொன்றில் மன்னாரில் குண்டுத்தாக்குதல்!!

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டு குண்டு தாக்குதலின் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான சேமாலை சந்தியோகு (வயது-56) என்ற குடும்பஸ்தரே படுகாயம் அடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
நேற்று மாலை காயமடைந்த நபரின் மகனுடன் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இரவு இப்பகுதிக்கு வந்த நில இளைஞர்கள் வீட்டின் வெளிப்பகுதியில் பொறுத்தப்பட்டிருந்த சீ.சீ.ரீ.வி கெமராக்களை உடைத்துள்ளனர்.
அதன்பின்னர் வீட்டின் முன் பகுதிக்கு வந்து இரவு 9.45 மணியளவில் மதிலினால் நாட்டு குண்டு ஒன்றை வீட்டு வளாகத்தினுள் எறிந்துள்ளனர்.
இதன் போது குறித்த குண்டு பாரிய சத்தத்துடன் வெடித்ததில் குறித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.
இத்னையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.
அதோடு, இன்று காலை விசேட தடவியல் நிபுணத்துவ பொலிஸாருடன் அங்கு சென்ற மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.