கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை!!

எல்பிட்டி - ஊருகஸ்மங்கந்திய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஊருகஸ்மங்கந்திய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹதேல்காவத்த பகுதியில் நேற்று மாலை மூவருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

நிதி பிரச்சினை தொடர்பிலே குறித்த நபர்களுக்கிடையில் முரண்பாடுகள் இடம்பெற்றதாகவும், இதன்போது நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டுள்ள நிலையில் , அவர் மற்றைய நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது படுகாயமடைந்த நபர் எல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஊருகஸ்மங்கந்திய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பொலிஸாரின் பாதுகாப்பில் கீழ் , எல்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊருகஸ்மங்கந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.