போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி சூடு!!
மத்திய மெக்ஸிகன் நகரமான இராபுவாடோவில் போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், 24பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மெக்ஸிகோவின் இராபுவாடோவில் நேற்று (புதன்கிழமை) நடந்த தாக்குதல் குறித்து, குவானாஜுவாடோ மாநில பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் 3பேர் மோசமான நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குவானாஜுவாடோவின் சட்டமா அதிபர் கார்லோஸ் ஜமரிபா, இந்த கொலையை விசாரிக்க ஒரு சிறப்புக் குழுவை நியமித்துள்ளார்.
இதை அவர் ‘கோழைத்தனமான குற்றச் செயல்’ என்று விபரித்துள்ளார். அதே நேரத்தில் ஆளுநர் டியாகோ சின்ஹூ வன்முறையைச் சமாளிக்க கூட்டாட்சி மற்றும் மாநில அதிகாரிகளிடமிருந்து ஒரு கூட்டு முயற்சியைக் கோரியுள்ளார்.
ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர், 19 மாதங்களுக்கு முன்னர் பதவியேற்றதில் இருந்து பதிவு செய்யப்பட்ட மிக மோசமான படுகொலையாக இது விபரிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo