இளம் தமிழ் பெண் பிரித்தானியாவில் மாயம்!!
பிரித்தானியாவில் லெய்டன்ஸ்டோன் பகுதியில் குடும்பத்துடன் வசித்துவந்த இளம்பெண் காலையில் நடைப்பயிற்சிக்கு சென்றவர் மாயமாகியுள்ளார்.
கடந்த மூன்று நாட்களாக அவர் வீடு திரும்பாத நிலையில், புகைப்படம் வெளியிட்டு குடும்பத்தார் உதவி கோரியுள்ளனர்.
லெய்டன்ஸ்டோன், வால்தம் வனப்பகுதி அருகே குடியிருக்கும் புருனல் பல்கலைக்கழக பட்டதாரியான 23 வயது பர்தீப் கவுர் பிளஹா என்பவரே இவ்வாறு மாயமாகியுள்ளார்.
கடந்த புதனன்று பகல் சுமார் 10.30 மணியளவில் வழக்கமான நடைப்பயிற்சிக்கு சென்றதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
அவர் தமது மொபைல்போனை எடுத்துச் சென்றுள்ளதாக நம்பும் குடும்பத்தினர், ஆனால் அது தற்போது செயல்படவில்லை எனவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
பர்தீப் கவுர் மாயமானதில் இருந்து நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அவரிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை எனவும் கூறப்படுகிறது.
பர்தீப் தொடர்பில் அவர் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்ட குடும்பத்தினர், பொதுமக்களில் எவரேனும் இவர் தொடர்பில் தகவல் தெரியவந்தால்தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo