வழமைக்கு திரும்பியது வடக்கிற்கான ரயில் சேவை!!

வவுனியாவில் இன்று அதிகாலை கொழும்பு நோக்கிச் சென்ற ரயில் ஈரப்பெரியகுளம் புனாவை எல்லை பகுதியில் தடம் புரண்டதையடுத்து வடக்கிற்கான ரயில் சேவை தடைப்பட்டிருந்தது.

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட ரயில் பாதை சீரமைப்புப்பணிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் இடம்பெற்ற நிலையில் பிற்பகல் 2.30 மணியளவில் வடக்கிற்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது.
இன்று காலை வவனியாவில் இருந்து அதிகாலை கொழும்புக்கு சென்ற கடுகதி ரயில் ஈரப்பெரியகுளம் பளாவை எல்லைப்பகுதியில் ரயில் பாதையைவிட்டு விலகி தடம் புரண்டுள்ளது.
இதையடுத்து தடம் புரண்ட ரயில் பெட்டிகளை கழற்றிவிட்டு விட்டு ஏனைய பெட்டிகளுடன் ஒரு மணி நேரத்தின் பின்னர் ரயில் கொழும்பு நோக்கி பயணித்தது.
இந்நிலையில் தடம் புரண்ட பெட்டிகளை அகற்றும் பணிகள் ரயில் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருந்து
இதன் காரணமாக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில்கள் அனைத்தும் வவுனியா ரயில் நிலையத்தில் தரித்து வைக்கப்பட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து யாழ் நோக்கி சென்ற ரயில்கள் மதவாச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்து.
அதன்பின்னர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு தடம்புரண்ட ரயில் பெட்டிகள் அங்கிருந்து அகற்றப்பட்டு வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.