வெலிக்கடை சிறைச்சாலை கைதிகளின் PCR முடிவுகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் எந்தவொரு கைதிக்கு அல்லது அதிகாரிகளுக்கோ கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக இராணுவத்தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பப்பட்ட கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் முடிவுகள் இதுவரை கிடைக்கப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் வெலிக்கடை சிறைச்சாலையின் கைதி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.