போக்குவரத்துக்கு விதி மீறலுக்கான தண்டப்பண அறவீட்டு விபரம்!!

போக்குவரத்துக்கு விதிகளை மீறலுக்கான வழக்கு தொடர்வதற்கு பதிலாக விதிக்கப்படும் தண்டம் தொட்பிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில்,
வேகமாகச் செலுத்துதல் – Rs. 1000
நிப்பாட்டல் – Rs. 500
பொலிசாரின் பணிப்புரைகள்/சைகைகளை மீறுதல் -Rs. 1000
சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் செலுத்துதல் – Rs. 2500
18 வயதிற்கு குறைந்தவர் வாகனம் செலுத்துதல்- Rs. 5000
அனுமதிப்பத்திரம் இல்லாதவரை வேலைக்கு அமர்த்துதல் – Rs. 3000
இறைவரி அனுமதிப்பத்திரம் கொண்டு செல்லாமை – Rs. 500
இறைவரி அனுமதிப்பத்திரம் #கட்டுப்பாடுகளை மீறுதல் -Rs. 1000
சாரதியின் சைகைகள் – Rs. 500
சாரதி இருக்கவேண்டிய முறை -Rs. 100
முன் ஆசனத்திலுள்ள ஆட்களின் எண்ணிக்கை – Rs. 100
ஒலி அல்லது ஒளி எச்சரிக்கைகள் -Rs. 100
வாகனத்தைப் பின்னோக்கிச் செலுத்துதல் -Rs. 20
மிதிபலகையில் பிரயாணம் செய்தல் – Rs. 100
நிற்பாட்டும் போது கவனிக்க வேண்டிய விதிகள் -Rs. 500
மேலதிக பிரயாணிகளை ஏற்றுதல் -Rs. 150
லொறியில் செல்லக்கூடிய ஆட்கள் – Rs. 150
விளம்பரங்களை விநியோகித்தல் -Rs. 100
அடையாளம் காணக்கூடிய இலக்கத் தகடு -Rs. 500
இலக்கத் தகட்டின் வடிவம் – Rs. 100
பெற்றோல் நிரப்பும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் -Rs. 20
பாதுகாப்பு தலைக்கவசத்தை அணியத்தவறியமை-Rs. 500
வீதியில் இடப்பக்கத்தால் போகத் தவறுதல் -Rs. 500
ஓட்டப்பாதை மாறித் தடை செய்தல் -Rs. 500
வாகனங்களை முன் செல்லத் தடை செய்தல் -Rs. 500
தெளிவான பார்வையின்றி முந்திச் செல்லல்-Rs. 500
தவறான முறையில் முந்திச் செல்லல் -Rs. 500
வீதியை கடக்கும் போது தடை செய்தல் -Rs. 500
Blogger இயக்குவது.