யுத்தம் செய்திருக்கவேண்டியவர்கள் மலையக மக்களும்தான்- ரோஹிணி கவிரத்ன!!

நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இந்த நாட்டை வளப்படுத்திய மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்கள் தமது உரிமைக்காக யுத்தத்தில் ஈடுபட்டிருக்க வேண்டுமென மாத்தளை மாவட்ட வேட்பாளர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.

இரத்தொட்டை-கபரகல பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் ரோஹிணி கவிரத்ன மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக தமது உரிமைகளைக் கோரி உள்நாட்டு யுத்தம் ஒன்றை வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள தமிழ் மக்கள் நடத்தினார்கள்.

அதேவேளை  நூற்றாண்டு காலத்திற்கு மேலாக இந்த நாட்டை வளப்படுத்திய மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்களும் தமது உரிமைக்காக யுத்தத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.ஆனால் அவர்கள் அஹிம்சை வழியிலேயே போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே அவர்களது காணி உரிமையை வென்றெடுக்கும் விடயத்திற்கு குரல் கொடுக்க தயாராக உள்ளேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.