இன்றும் 269 பேர் நாடு திரும்பினர்!
கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு திரும்பி முடியாமல் மாலைதீவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 178 பேர் இன்று பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் விசேட விமானத்தின் ஊடாக இவர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமான பயணிகளை தாங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யூ.எல். 4102 என்ற விசேட விமானம் ஊடாக அவர்கள் நாட்டிற்கு வந்தனர்.
மத்தள விமான நிலையத்தினுள் வைத்து இவர்கள் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை, அதன் பெறுபேறுகள் கிடைக்கும் வரையில் விமான நிலையத்த சூழவுள்ள விடுதிகளில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளானர்.
இதேவேளை, நாடு திரும்பமுடியாமல் நிர்கதிக்கு உள்ளான நிலையில் 3 நாடுகளில் தங்கியிருந்த 91 இலங்கையர்களுடனான 4 விசேட விமான விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன.
இவற்றில் முதலாவது விமானம் கத்தாரின் தோஹா விமான நிலையத்திலிருந்தும், மாலைதீவிலிருந்து இரண்டு விமானங்கள் இலங்கை வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அபுதாபியிலிருந்தும் ஒருவர் நாடு திரும்பியுள்ளார்.
இவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தினுள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக விமான நிலைய கடமை நேர அதிகாரி தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo