78 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா உடுத்துறையில் மீட்பு!!

பளை - உடுத்துறை கடற்பகுதியில் 78 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா மீட்டகப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேம்படி - உடுத்துறை கடற்பகுதியில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் புலனாய்வுத் துறையினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் , கடற்படையினரும் சுற்றிவளைப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது வேம்படி கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மீன்பிடி படகொன்றை நிறுத்திவிட்டு , அதிலிருந்த சிலர் தப்பியோடுவதை படையினர் அவதானத்துள்ளனர்.
இதனையடுத்து 13 பொதிகளுக்குள் எடுத்துவரப்பட்ட 52 கிலோ 680 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் பெறுமதி 78 இலட்சத்திற்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.