தனிமைப்படுத்தப்பட்ட 165 பேர் விடுவிப்பு!!

வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய நிலையில் வவுனியா – வேலங்குளம் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த 165 பேர் இன்று(புதன்கிழமை) விடுவிக்கப்பட்டனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும்செயற்பாடுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய கடந்த 10 ஆம் திகதி டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பலர்  வவுனியா வேலங்குளம் விமானப்படைத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

19 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த நிலையில், அவர்களது சொந்த இடங்களான மட்டக்களப்பு, கண்டி, காலி, போன்ற பகுதிகளிற்கு பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.

குறித்த பயணிகளிற்கான பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று பீடிக்கவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவர்கள் தமது சொந்த இடங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.