கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!

வவுனியா சுந்தரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று (10.07.2020) இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டுள்ளார்.
இரவு 9.00 மணியளவில் அவரை காணவில்லை என தேடிய சமயத்தில் சடங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தினை மீட்டெடுத்த அயலவர்கள் சடலத்தினை வைத்தியசாலைக்கு எடுத்து சென்றனர். சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சுந்தபுரம் பகுதியினை சேர்ந்த 34 வயதுடைய நித்தியானந்தம் என்ற நபராவார்.
மீட்கப்பட்ட நபரின் தலையின் பின் பகுதியிருந்து இரத்தம் வந்துள்ளமையினால் இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என உயிரிழந்த நபரின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.