தமிழரசுக்கட்சி தொடர்பில் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் விளக்கம்!!

இலங்கைத் தமிழரசுக்கட்சியையும், அதன் சின்னத்தையும் பாதுகாப்பதற்காக தாய்குலம் ஓரணியில் திரண்டுள்ளதாக அக்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட முன்னாள் யாழ். மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் விமலேஸ்வரி ஸ்ரீகாந்தரூபன் தெரிவித்துள்ளார்.

யாழில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று(வியாழக்கிழமை) மலரஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசு கட்சி தமிழ் மக்களுக்கான கட்சி, இந்த கட்சி ஒருபோதும் தனது நிலையிலிருந்து மாறக்கூடாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
நாங்கள் இருக்கின்ற இடம் தூய்மையாக இருக்க வேண்டும். நாங்கள் வளர்க்கின்ற மரம் செழிப்பானதாக இருக்க வேண்டும். எங்களுடைய கொள்கைகள் நேர்மையானதாக இருக்க வேண்டும். நாங்கள் எடுக்கின்ற முடிவுகள் சரியானதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தாங்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.