விமான நிலையம் திறக்கப்படாது - அரசாங்கம் அறிவிப்பு!
பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் திறக்கலாம் என விமான சேவைகள் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களில் நாட்டில் மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது,இந்நிலையில் விமான நிலையத்தை திறப்பது நாட்டிற்கு மீண்டும் நெருக்கடிகளை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட் வைரஸ் தாக்கம் மிக மோசமாக உள்ளதுடன் இந்தியாவில் இருந்து ஒரு பிரஜையேனும் நாட்டிற்குள் வந்தால் நிலைமைகள் மோசமடையும் சாத்தியம் காணப்படுகின்றது. எனவே இப்போதைய நிலையில் விமான நிலையத்தை திறப்பது சிக்கலான விடயம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
நாட்டில் மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதை இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கொரோனா பரவலை அடுத்து கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் இருந்து பண்டாரநாயக சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் திறக்கலாம் என விமான சேவைகள் அமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், விமான நிலையத்தை இப்போதைக்கு திறக்க வேண்டாம் என சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களில் நாட்டில் மீண்டும் கொவிட் -19 வைரஸ் பரவல் குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது,இந்நிலையில் விமான நிலையத்தை திறப்பது நாட்டிற்கு மீண்டும் நெருக்கடிகளை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொவிட் வைரஸ் தாக்கம் மிக மோசமாக உள்ளதுடன் இந்தியாவில் இருந்து ஒரு பிரஜையேனும் நாட்டிற்குள் வந்தால் நிலைமைகள் மோசமடையும் சாத்தியம் காணப்படுகின்றது. எனவே இப்போதைய நிலையில் விமான நிலையத்தை திறப்பது சிக்கலான விடயம் என சுகாதார அதிகாரிகள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo