மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பிய ரட்சிதா!!

கொரோனா ஊரடங்கால் சீரியல்களின் பழைய எபிசோட்களை ஒளிபரப்பி வந்த விஜய் டிவி வரும் 27-ம் தேதி முதல் புதிய எபிசோட்களை ஒளிபரப்ப உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ஆயுத எழுத்து, செந்தூரப்பூவே, தேன் மொழி உள்ளிட்ட தொடர்கள் திங்கள் முதல் சனி வரை மாலையில் இருந்து இரவு வரை ஒளிபரப்பாகும்.

அதேபோல் பிற்பகலில் ஈரமான ரோஜாவே, பொண்ணுக்கு தங்க மனசு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் ஆகிய தொடர்கள் திங்கள் முதல் சனி வரை மதிய நேரங்களில் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பாக்கியலட்சுமி, நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட புதிய தொடர்கள் வர உள்ளன.


நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நிறைவடைந்து சீசன் 2 ஆரம்பாகவுள்ளது. இதில் மாயன் கதாபாத்திரம் தொடரும். மாயனாக செந்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சரவணன் மீனாட்சி தொடரின் பிரபலம் ரட்சிதா நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.