கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடை!
கொழும்பின் சில பகுதிகளில் நாளை ( சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5 மணி வரையும் 9 மணித்தியால நீர் விநியோக இடைநிறுத்தம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோக இடைநிறுத்தம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அதேபோல் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.
அவசர திருத்தப் பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோக இடைநிறுத்தம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை