நகைத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நகைத் திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை நேற்றிரவு (24) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கஸ்தூரி நகர், மற்றும் திருஞானசம்பந்தர் வீதி பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் வீடொன்றில் இரண்டு பவுன் தங்க நகைகளை திருடி அடகு கடையொன்றில் அடகு வைத்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களுக்கு வேறு ஒரு நகைத் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்பு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.