கொரோனாவின் மூன்றாவது அலை ஆரம்பம் - ஹரித அலுத்கே!!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஹரித அலுத்கே மேலும் கூறியுள்ளதாவது, “கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாக்க இருந்த ஆபத்து வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் இராஜாங்கனை பகுதியில் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாக தற்போது தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. ஆனால் கொரோனா தொற்றாளர்களாக இதுவரை எவரும் அடையாளம் காணப்படவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜாங்கனை பகுதியில் இதுவரை சுமார் 8ஆயிரத்து 500பேர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை