யூரோ ரி-20 ஸ்லேம் தொடர் ஒத்திவைப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று காரணமாக, முதல்முறையாக நடைபெறவிருந்த ‘யூரோ ரி-20 ஸ்லேம் தொடர்’ ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிச்சயமற்ற தன்மையால், ‘யூரோ யூரோ ரி-20 ஸ்லேம் தொடர்’ அடுத்த ஆண்டு நடைபெறும் என்பதனை போட்டி அமைப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமைப்பாளர்கள், நிதி ஆதரவாளர்கள் மற்றும் அயர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் நெதர்லாந்தின் கிரிக்கெட் சபைகளின் சமீபத்திய மாதங்களில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போட்டியைத் தொடங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து போட்டி அமைப்பாளர்கள் தற்போது யோசித்து வருகின்றனர்.
ஆறு அணிகள் பங்கேற்கும் இத் தொடர், எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறுவதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை