ஆற்றில் மணல் வெட்டியவர் முதலை இழுத்ததால் காணாமல் போயுள்ளார்!!

மட்டக்களப்பு, கறுத்தப்பாலம் ஆற்றில் மாட்டு வண்டியில் மண் ஏற்றச் சென்ற ஒருவரை முதலை இழுத்துச்சென்றநிலையில் காணாமல் போயுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

கொடுவாமடு, காளிகோயில் வீதியைச் சேர்ந்த 44 வயதுடைய கதிர்காமத்தம்பி மயில்வாகனம் என்பவரே இவ்வாறு முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர், வாழ்வாதாரத்துக்காக கறுத்தப்பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்று மண்ணை அகழ்ந்து மாட்டுவண்டியில் ஏற்றிச்சென்று வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவதினமான இன்று காலை குறித்த ஆற்றில் மாண்டு வண்டியில் சென்று ஆற்று மண் அகழ்வில் தனிமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது முதலை அவரை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து ஆற்றுப் பகுதியில் மாட்டுவண்டி மற்றும் மாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் காணாமல் போனவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் அவரின் உறுவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.