இலங்கையில் கடலுக்குள் திறக்கப்பட்ட இரண்டாவது அற்புத காட்சிக்கூடம்!

இலங்கை கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியகம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.


கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவினால் திருகோணமலை சேண்ட் பே கடற்பகுதியில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது.

சேண்ட் பே கடற்கரைப் பகுதியும் அதனை சூழலுள்ள பகுதியும் சுற்றுலாப் பயணிகளை அதிகமாக கவர்ந்திழுக்கும் பகுதியாகும்.

இந்நிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ள கடலுக்கு அடியிலான அருங்காட்சியகமானது சுமார் 60 அடி ஆழத்தில் உள்ளதோடு 150 அடி நீளமும், 85 அடி அகலமும் வரை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.