கல்முனை. திஸ்ஸபுர பகுதியில் 04பேர் கைது!!

 

அம்பாறை மாவட்டம் திஸ்ஸபுர என்ற பகுதியில் தொல்பொருட்களுக்காக சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அகழ்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் இதன்போது காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தெவிநுவர, குடாவெல்ல மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் அம்பாறை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.