211 பேர் வெளிநாடுகளிலிருந்து தாய்நாடு திரும்பியுள்ளனர்!

 


ஹொங்கொங், கட்டார் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து மேலும் 211 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

ஹொங்கொங்கிலிருந்து 42 பேர் நேற்று (புதன்கிழமை) இரவு 9.30 இற்கும், அதிகாலை 1.45 க்கு கட்டார் மற்றும் குவைத்திலிருந்து 12 பேரும் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதேபோல், அதிகாலை 2.36 க்கும் கட்டார் மற்றும் குவைத்திலிருந்து மேலும் 157 இலங்கையர்கள் மற்றுமொரு விமானத்தில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.