முல்லைத்தீவில் 76.25 வீத வாக்குப் பதிவு!!
நடைபெற்று முடிந்த வாக்களிப்புக்கள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நிலைப்பாடுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்களார்களின் எண்ணிக்கை 78அயிரத்தி 360 வாக்குகளில் 57ஆயிரித்தி 175 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது 76.25 வீத வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 136 வாக்களிப்பு நிலையத்திலும் பொது சுகாதார விதிமுறைகளை பேணி வாக்களிப்புக்கள் நடைபெற்றுள்ளன வாக்குசாவடியில் இருந்து வாக்கு பெட்டிகள் வக்கெண்ணும் நிலையமான முள்ளிவளையில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்த கல்லூரியில் பெட்டிகள் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளன.
முதலாவது வாக்குபெட்டி 5.52 மணிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் மத்திய நிலையமான முள்ளியவளை வித்தியானந்தா கல்லூயில் பொலீசார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
நாளை காலை 8.00 மணிக்கு வாக்குகள் எண்ணும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை