கிளிநொச்சியில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு!!

 கிளிநொச்சி முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

முறிப்பிலிருந்து நேற்று (புதன்கிழமை) மாலை கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.

இதன்போது குறித்த பகுதியில் காணப்படும் வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய மேலும் ஒரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனை மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் கிளிநொச்சி காந்தி கிராமம் பகுதியையைச் சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளதுதடன், உயிரிழந்த மற்றைய இளைஞன் தொடர்பான தகவல்கள் எவையும் இதுவரையில் அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.