343 பேர் மேல் மாகாணத்தில் கைது!!
மேல் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 343 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக 126 பேரும் கஞ்சா கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் 84 பேரும் ஐஸ் போதைப்பொருளுடன் 12 பேரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றிரவு 8 மணி முதல் இன்று காலை 4 மணிவரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் 274 பேர் மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை