கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு


 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2995 ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும், பிரித்தானியா மற்றும் லெபனானில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2849 ஆக அதிகரித்துள்ளதுடன், தற்போது 134 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.