ஈஸ்ரர் தாக்குதல் தொடர்பில் மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பதிவு!!

 


கடந்த ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல்-21 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வாக்குமூலம் பெற்றுவருகின்றனர்.

மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இன்று முற்பகல் சென்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவினர் வாக்குமூலத்தை பதிவுசெய்கின்றனர்.

ஏப்ரல்-21 தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் பதிவுசெய்வதற்காக குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தான் ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது எனவும் தனது இல்லத்திற்கு வருகைதந்து வாக்குமூலம் பதிவு செய்துகொள்ளுமாறும் மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவிடம் கோரியிருந்த நிலையில் இன்று இந்த வாக்குமூலம் பெறும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.