சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு நன்றி

சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு
எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது நம்பிக்கை வைத்த வாக்காளர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில்,

இன்று (05) இடம்பெற்ற பொதுத் தேர்தலில் சுமார் 71 % வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கொவிட் -19 அவதானம் உலகில் இருந்து நீங்காத இந்த சந்தர்ப்பத்தில் பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்திய தெற்காசியாவின் முதலாவது நாடாக பொதுமக்கள் எமது சுகாதார பாதுகாப்பு முறைமை மீது வைத்த நம்பிக்கைக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.