இலங்கையில் கொரோனா நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!

 


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 989 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம், குவைட் முதலான நாடுகளில் இருந்து நாடு திரும்பிய மூன்று பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதேவேளை நேற்றைய தினம்  12 பேர், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து  குணமடைந்து, தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு  தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 135பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 12பேர்  உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.