கனகராயன்குளம் பகுதியில் முதிவரின் சடலம் மீட்பு!

 

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் காயங்களுடன் முதிவர் ஒருவரின் சடலம் ஒன்று இன்று காலை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள வீட்டொன்றின் அருகாமையில் சடலம் ஒன்று இருப்பது தொடர்பாக கனகராயன்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் கொலை என்ற ரீதியில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த சடலத்தினை வவுனியா நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்லீமா பௌசானா நேரில் சென்று பார்வையிட்டிருந்தார்.

சம்பவத்தில் க. இந்திரகுமார் (75) என்ற நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.