காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் விடுத்துள்ள கோரிக்கை!!

Add caption
 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கில் அனுஸ்டிப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் எமக்காக குரல் கொடுங்கள் என வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சண்முகம் சரோஜினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

வடக்கில் யாழ். பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகும் பேரணி யாழ். மாவட்ட செயலகம் வரை சென்று அங்கு ஐ.நாவுக்கு கையளிப்பதற்கான மகஜரை வழங்கவுள்ளோம்.

அதேபோன்று கிழக்கிலும் கல்லடி பாலத்தில் இருந்து காந்தி பூங்கா வரை சென்று அங்கும் மகஜரொன்று கையளிக்கவுள்ளோம்.

எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு மூன்றரை வருடங்கள் முடிவடைந்து விட்டது. இருந்தும் எமது பிள்ளைகளுக்கான முடிவுகள் இன்னும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் கட்சி பேதமின்றி எமக்காக குரல் கொடுங்கள் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.