20 ஆவது திருத்தத்தில் சில உட்பிரிவுகள் தொடரும் – நாலக கொடகேவ!!


 19 ஆவது திருத்தத்தில் உள்ள சில பிரிவுகளை உள்ளடக்கிய சில உட்பிரிவுகள் 20 ஆவது திருத்தத்தில் தொடரும் என இராஜாங்க அமைச்சர் நாலக கொடகேவ தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம் மற்றும் 2 தடவை மட்டுமே ஒருவர் ஜனாதிபதியாக போட்டியிட முடியும் என்கின்ற உட்பிரிவுகள் தொடரும் என கூறினார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் துணை பிரதமர் பதவி குறித்து பேசிய அவர், 19 ஆவது திருத்தம் மிகவும் சிக்கலானது என தெரிவித்திருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.