பொலிஸ் நிலையத்தில் மனைவி மீது கணவன் கொலைவெறித்தாக்குதல்!!

 


அல்வாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவனுக்கு எதிராக நெல்லியடி போலீசில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார். காவல்துறையினர்  இருவரையும் காவல்துறை நிலையம் வருமாறு அழைத்து இருந்தார்கள். இருவரும் விசாரணைக்காக நேற்றையதினம் காவல்துறை நிலையத்தில் சமூகமளித்திருந்தார்.

காவல்துறையினர் இருவரையும் விசாரணை செய்து கொண்டிருந்த வேளை திடீரென கணவன் மனைவி மீது தாறுமாறாக அடித்து உள்ளார். 

உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு கணவன் காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். நீதவானால் விசாரணையின் மேற்கொள்ளப்பட்டு   ஒன்பதாம் மாதம் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது என தெரியவருகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.