பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள்!!
பாடசாலை மாணவர்களின் பேருந்து சேவைக்கு பயன்படும் பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய தற்போது 10 பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் பூசப்பட்டுள்ளாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசணைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியேக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில் மாணவர்களின் போக்குவரத்திற்காக மட்டும் பயன்படுத்தவே இவ்வாறு பேருந்துகளுக்கு நிறப்பூச்சு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை