தொடர்ந்தும் கவலைக்கிடமான நிலையில் எஸ்.பி.பி!!

 

பிரபல முன்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பி கடந்த 5ஆம் திகதி எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு காணொளியொன்றினையும் வெளியிட்டிருந்தார்.

குறித்த காணொளியில் தான் நலமாக இருப்பதாகவும், தொலைப்பேசியில் யாரும் அழைக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்திருந்தது. தற்போது செயற்கை சுவாச கருவியுடன், எக்மோ கருவியும் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை அவ்வவ்போது வெளியிட்டு வருகிறது. இதன்படி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் நேற்று திரைபிரபலங்கள் பலரும் அவருக்காக கூட்டுப்பிராத்தனையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.