கோலாகலமாக கொண்டாடப்படுகிறது விநாயகர் சதுர்த்தி!!

 

உலக முழுவதிலும் உள்ள இந்து மக்கள் அனைவரும், விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில், விநாயகர் சதுர்த்தி விழா மக்களினால் கொண்டாடப்படுகின்றது.

எனினும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இம்முறை, விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், விநாயகர் ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்மாநிலங்களிலுள்ள ஆலயங்களில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.

மேலும் ஒரு சில ஆலயங்களில் பக்தர்கள்,  சமூக இடைவெளியை பேணி சாமி தரிசனம் செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சென்னை கமலாலயத்தில் விநாயகர் சிலைக்கு  முகக்கவசம் அணிவித்து, பா.ஜ.க.வினர் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.