தீவிரவாதிகள் மூவர் புல்வாமாவில் சுட்டுக்கொலை!!
ஜம்மு- காஷ்மீர்- புல்வாமா, ஜதூரா பகுதியில் 3 தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் வீரர் ஒருவரும் வீர மரணம் அடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜதூராவில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக இராணுவத்தினருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனடிப்படையில் இராணுவம் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் ஒன்றாக இணைந்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் திடீர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதன்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது.
இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் வீரர் ஒருவர் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை