கலிஃபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ!!

 

மத்திய மற்றும் வடக்கு கலிஃபோர்னியாவில் கட்டுக்கடங்காமல் பரவிவரும் காட்டுத்தீயினால், 175,000 குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 560 இடங்களில் பரவியுள்ள இந்த காட்டுத்தீயினால், இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 43 தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

மாநில வரலாற்றில் மிகப் பெரிய காட்டுத்தீயாக பார்க்கப்படும் இந்த காட்டுத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 12,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

அத்துடன், அவுஸ்ரேலியா மற்றும் கனடாவிடமிருந்து உதவியும் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமைக்குள், சில தீ விபத்துக்கள் முந்தைய நாளிலிருந்து இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.