உரிமையுடன் கூடிய அபிவிருத்திக்கு முதல் படியில் !📷

பருத்தித்துறை சுப்பர் மடத்தில் ஒரு வீதியினை தனிப்பட்ட ஒருவரான சீறி அவர்கள் தன்னுடைய நிதியில் கொங்ரீட் வீதியாக மாற்றி

அமைத்துள்ளார்.அதாவது பருத்தித்துறை நகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் நீண்டகாலமாக போடப்படாமல் இருந்த வீதி அவர் தன்னுடைய சுய முயற்சியில் தன்னுடைய சொந்தப் பணத்தில் 150 அடி நீளமான வீதியினை 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான நிதியில் கொங்ரீட் வீதியாக மாற்றி அமைத்துள்ளார். இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி ஆகும். தொடர்ச்சியாக அதனுடன் தொடர்புள்ள ஏனைய வீதிகளையும் கொங்கீறீட் வீதியாக மாற்றவுள்ளார். இதனால் அவ்வீதியில் வசிக்கும் 10 மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடைந்துள்ளனர். சிறு வீதிகளில் வாழும் மக்கள் இவ்வாறான முயற்சிகள் ஊடாகவே பயன் பெற முடியும். இவை சார்ந்த நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை கூறி இம்மக்களின் தேவைகளை நிறைவு செய்யாத வேளையில் சீறி அவர்களின் செயற்பாடு பாராட்டதக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.