மேலும் மூவருக்கு இலங்கையில் கொரோனா தொற்று!!


 இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 03 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மாலைதீவிலிருந்து நாடு திரும்பிய மூவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 998ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 11 குணமடைந்து இன்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 860ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 126 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இலங்கையில் இதுவரையில் 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.