எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம்!!

 

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த சில நாட்களைக் காட்டிலும் தற்போது சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக M.G.M மருத்துவமனை நிர்வாகத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

மருத்துவர் குழுவினர் அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் மருத்துவக் குழுவினரின் ஆலோசனையில்  எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அமைந்தகரை M.G.M மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 5ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதேவேளை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென அவர்களது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.