கிளிநொச்சியின் பிரபல பாடசாலையில் போதைப்பொருளுடன் மாணவர்கள் கைது!!
கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் 4 பேர் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
நேற்றய தினம் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்றிருந்த பொலிஸார் குறித்த மாணவர்கள் 4 பேரையும் கைது செய்திருப்பதுடன், அவர்களிடமிருந்த போதைப் பொருளையும் மீட்டுள்ளனர்.
குறித்த 4பேரும் பாடசாலை மலசல கூடத்திற்குள் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை