திரையரங்குகளைத் திறப்பது தொடர்பாக தமிழகத்தில் மத்திய அரசு ஆலோசனை!

 தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது தொடர்பாக மத்திய அரசு செப்டம்பர் முதலாம் திகதி ஆலோசனை நடத்தவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி, கோவில்பட்டி பகுதியில் ஊடகங்களுக்கு இன்று (சனிக்கிழமை) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருவதால் திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசு ஆலோசனை நடத்திய பின்னர் எவ்வாறான வழிகாட்டுதல்களைச் சொல்கிறதோ அதன்படி தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.