முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கண்காட்சி வயல் விழா!
முல்லைத்தீவு மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் கண்காட்சி வயல் விழா இன்று (வியாழக்கிழமை) வெகுசிறப்பாக இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவில் பாரம்பரிய விவசாய பயிர்களை அறிமுகப்படுத்தும் நோக்கோடும் நவீன முறையில் விவசாய செய்கையினை மேற்கொள்வது தொடர்பாகவும் உள்ளுர் உணவு உற்பத்திகளையும் வெளளிப்படுத்தும் நோக்கோடு வயல் விழா இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் விவசாய பண்னையில் ஒழுங்கமைக்கப்பட்டு விவசாயிகளின் பார்வைக்காக வட மாகாண விவசாய பணிப்பாளர் சி.சிவகுமார் அவர்களினால் வைபக ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை பெருந்திரளான விவசாயிகள் பாடசாலை மாணவர்கள் என பலரும் பார்வையிட்டு விளக்கங்களை கேட்டறிந்துள்ளனர்.
இன் நிகழ்விற்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயளாலர் த.அகிலன் அவர்களும் வட மாகாண நீர்ப்பாசண பணிப்பாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை