கிழக்கு இந்தோனேசியாவில் நிலநடுக்கம்!
கிழக்கு இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் இன்று (வெள்ளிக்கிழமை) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த நில அதிர்வை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கம், சுலேவசி தீவில் கட்டாபுவுக்கு தெற்கே 220 கிலோமீற்றர் தொலைவிலும் 600 கிலோமீற்றருக்கும் அதிகமான ஆழத்தில் கடலுக்கடியிலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, நிலநடுக்க மையப்பகுதியான பண்டா கடலின் தெற்கே குபாங் நகரில் கட்டடங்கள் அதிர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேத விபரங்கள் இன்னும் தெரியவரவில்லை.
இதேவேளை, அதிகமான ஆழத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள் ஆழம் குறைந்த மேலோட்டமான நிலநடுக்கங்களை விடவும் பாதிப்பு குறைவாகவே இருக்கும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை