தென்கொரியாவில் 42 நாட்கள் தொடர் மழை!!

தென் கொரியாவில் தொடர்ச்சியாக 42 நாட்களாக பெருத்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏழு ஆண்டுகளின் பின்னர் பெய்த கடும் மழை காரணமாக மேலும் 13 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

தென்கொரியாவின் தலைநர் சியோல் மற்றும் அதனை அண்டிய மாகாணங்களில் கடந்த சில நாட்களால் பெய்து வரும் அடைமழைக் காரணமாக, அங்கு பல்வேறு பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு 1000 பேரளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்காலிய வசிப்பிடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த வெள்ளத்தால் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்தோடு, விதிகள், நெடுஞ்சாலைகள், வர்த்தக நிலையங்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களில் 50 முதல் 100 மில்லி மீற்றர் அளவிலான அடை மழை தொடர்ச்சியாக பெய்து வருவதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.